அல்வையம் பதியினிலே அன்னையாய் அமர்ந்தவளே
அகிலமே உன் அடக்கம் அகிலாண்ட நாயகியே
அருட்ப்பார்வை தந்திடுவாய் அன்னை முத்து மாரியம்மா
அம்மையாய் நான் வணங்கும் ஆனைமுகன் தாயவளே
வேவிலந்தை பதியினிலே விரும்பி உறைபவளே
வேண்டும் வரம் தந்திடுவாய் வேலனை பெற்றவளே
வேப்பிலையை கைப்பிடித்தே வீதி வலம் வந்திடுவாய்
வேதனைகள் தீருமம்மா வேவிலந்தை மாரியம்மா
முப்பத்து முக்கோடி தேவர்களும் வணங்கிடவே
மூவுலக மாந்தர்களும் முன்வந்து போற்றிடவே
மனக்குறைகள் தீருமம்மா மகமாயி மாரியம்மா
மத்தள மேளமுடன் மணியோசை ஒலித்திடவே
பச்சை நிற பட்டுடுத்தி பதக்கங்கள் பல தரித்து
பாதங்கள் இரண்டிலுமே சதங்கைகள் ஒலித்திடவே
பிள்ளைகளை காத்திடுவாய் பெற்றவளே மாரியம்மா
பிறை போன்ற நெற்றியிலே குங்கும திலகமிட்டு
கற்ப்பூர ஜோதியிலே களிப்புடன் வீற்றிருப்பாய்
கருமாரி ஆனவளே உரு மாறி வருபவளே
பாவி என்னை காத்திடுவாய் பராசக்தி மாரியம்மா
பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரந்தாமன் தங்கையரே
அண்டங்களை காத்திடவே அல்வையில் கோயில் கொண்ட
ஆனந்த பைரவியே ஆதிபராசக்தியம்மா
ஆயிரம் கண்ணுடைய அல்வாய் முத்துமாரியம்மா
ஆனந்த கூத்தாடும் ஆதிசிவன் பாதியம்மா
(ஆக்கம் : தமயந்தி சந்திரதாஸ்)
Special thanks to N.Kanesh for camera.