இன்றைய தினம் எமது ஆலயத்தில் வெகுவிமர்சையாக பல்லாயிரக் கணக்கான பெண் ஆடியவர்கள் அம்பாளை வேண்டி வரலஷ்மி பூஜை செய்தனர். கோயிலின் உள்வீதி முழுவதும் பெண் பக்த அடியவர்கள் பூஜை செய்ததால் உள்வீதி முழுவதும் அடியவர் கூட்டம் அலைமோதியது. மதியம் 2 மணிக்கு ஸ்ணபன அபிசேகத்துடன் ஆரம்பமான வரலஷ்மி பூஜை 5 மணியளவில் அம்பாள் உள்வீதி மற்றும் வெளிவீதி வலம்வந்ததை தொடர்ந்து வரலஷ்மி பூஜை காப்புகட்டும் வைபவம் இடம் பெற்றது.