இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பெண் அடியவர்கள் எம் அம்மனை மகிழ்விக்கும் பொருட்டு தம் தலைமேல் கற்பூரச்சட்டி ஏந்திய வண்ணம் ஆலயத்தின் வெளிவீதியை வலம் வந்தனர். இன்றைய உபயகாரரால் மாலை வீதி வலத்தின்போது கோவிலின் வெளிவீதி முழுவதும் கற்பூரச்சட்டி நிலத்தில் எரிக்கப்பட்டது மிகவும் சிறப்பான தொரு அம்சமாக காணப்பட்டது.